Saturday, 9 July 2016

கடவுளின் அடையாளங்கள்

"குழந்தைகள், கடவுளின் அடையாளங்கள் "

அடையாளம் 1 (நிறைய பணம்): 
ஒன்பது வயது சிறுவன் பாலாஜியின் வீடு - நிறைய பணம் - பார்க்கும் இடமெல்லாம் பணம் -அன்பு செலுத்த அம்மா அப்பா இல்லை -தமிழ் சினிமாவில் வருவது போல - அப்பா -தொழில் மேல் காதல், அம்மாவிற்கு அழகு ஆடம்பரத்தின் மேல் காதல் - இரண்டு பேரும் வீட்டிற்கே எப்பொழுதாவது தான் வருவார்கள் - எப்பொழுதாவது தான் பாலாஜியிடம் பேசுவார்கள் - பள்ளிக்கு செல்ல ஒரு கார், கொண்டு விட்டு கூப்பிட்டு வர ஒரு வேலையாள் - என்ன, தமிழ் சினிமாவில் வருவது போல் - அந்த வேலையாள் அவனிடம் அன்பு செலுத்தி, அப்பாவை போல், அம்மாவை போல், வளர்த்து, background music போட்டு பாட்டு வந்து, அதெல்லாம் இல்லை. வேலையாள், அவனை பார்த்து கொள்வதை "வேலை" ஆக தான் செய்தான். சிறுவனுக்கு என்று ஒரு அறை,அவ்வளவு பெரிய வீட்டில் இடமா இல்லை, கூப்பிடும் தூரத்தில் வேலையாட்கள், சமைக்க ஒரு சிலர், அவனுக்கு பரிமாற ஒரு சிலர், துணிகளை தோய்த்து வைக்க ஒரு சிலர், shoe மாட்டி விட ஒரு ஆள். ஆனால் அவன் தனியாக வளர்ந்தான். ஒரு ஒன்பது வயது சிறுவனுக்கு இந்த தனிமை - பசியினும் கொடியது!

அடையாளம் 2 (கைநிறைய பணம்):
நடுத்தர குடும்பம் - ஒன்பது வயது ஷாலினி - அப்பா -வங்கியில் வேலை செய்பவர் - அம்மா ஷாலினி பிறந்தவுடன் வேலையை விட்டுவிட்டாள், ஷாலினியை பார்த்து கொள்வதற்காக - காதல் கல்யாணம் - காதல், காமம், hormones, தமிழ் சினிமா, கல்லூரி வாழ்க்கை, infatuation எல்லாம் கலந்த இரண்டு வருட அவசர முடிவு - கல்யாணம் முடிந்து ஒரே வருடத்தில் ஷாலினி பிறந்தாள் - அம்மாவிற்கு இருபத்து நான்கு வயது (இப்பொழுது முப்பதுக்கும் மேல்) - வேலையை இழக்கும் படி ஆகி விட்டது. வாழ்க்கையில் ஒரு திடீர் crisis போல் உணர்ந்தாள், பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு, (சில பேர்க்கு) காதல், வேலை, கல்யாணம், குழந்தை என்று படிக்கட்டு அமைத்த சமூக அமைப்பின் சிலந்தி வலையில் விழுந்தது போல் நினைத்தாள். அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தினம் சண்டை, சண்டை என்றால் வாக்கு வாதம் மட்டும் அல்ல, சில சமயம் அடியிலும் முடியும், அதிர்ந்து போய் நிற்கும் ஷாலினிக்கும் அடி விழும். ஷாலினிக்கு பெற்றோர்களை பார்த்தால் சொல்ல முடியாத பயம். பண சண்டை, குடும்ப சண்டை, இரண்டு வீட்டு பெற்றோர்களை பற்றிய புகார் சண்டை, cigarette பிடிப்பதில் ஆரம்பித்து உன்னை கல்யாணம் பன்னிருக்கவே கூடாது என்ற சண்டை. முழுவதுமாக "adult" ஆக வளராத இரண்டு மனிதர்கள் கல்யாணம் என்னும் "intelligent and love based co-existent arrangement" புரிந்து கொள்ளாத, புரியாமல் "விவகாரத்து", என்று பரோட்டா சூரி கோட்டை அழிப்பது போல் முற்படும் முட்டாள்களின் சிற்றின்ப செயலினாலும், மாட்டி கொண்ட எத்தனையோ குழந்தைகள் போல ஷாலினியும் ஒருவள்.

அடையாளம் 3 (சோறு):
சுறுசுறுப்பான திருவான்மியூர் LB ரோடு சிக்னல், சிகப்பு விழ காத்திருக்கும் கண்கள், ஆமாம், சிகப்பு. ரோட்டோரமாய் நிற்கும் இந்த சிறுவர்கள் சிகப்பு விழுந்தவுடன் கார்களில் அமர்ந்திருப்பவர்களிடம் புத்தகம் விற்பார்கள். "யே பாபே" (பாபு) என்று ஒருவன் குரல் கொடுக்க, அந்த சிறுவனுக்கு எட்டு அல்லது ஒன்பது வயதிருக்கலாம். என் காரின் கண்ணாடியருகே நின்று "சார் சாப்பிடவே இல்ல சார், வாங்கிகிங்க சார்" என்று சொல்லும் பொழுது அந்த குரல் என்னை ஏதோ செய்தது. உன்னால் முடியும் தம்பியில், ராபிச்சைகாரனின் குரலை கேட்டு, சங்கீதத்தில் கவனம் செலுத்த முடியாத கமல் போல. அவனிடம் ஒரு புத்தகத்தை நான் வாங்கினேன். வாங்கினால் அவனுக்கு உதவுமா? இல்லை அவன் தற்போதைய நிலையையே நீடிக்க விடுமா? அங்கு செல்லும் நூற்றுக்கணக்கான கார்களும், அரசும், அரசியில்வாதிகளும், தன்னார்வ தொண்டுகளும், போலீஸ்காரர்களும், "தன்னுடைய அடையாளம்" என்று சொல்லும் கடவுளும் கூட, அவனின் இன்னலை போக்கவில்லை. எத்தனை குழந்தைகள், எத்தனை சிக்னல்கள் -பச்சைவிளக்கு வந்ததும் காரை ஒட்டி சென்று விட்டு, அன்றாட பிரச்சனைகளில் கரைந்து போனேன்.

"யோவ் தலப்பா, இன்னமோ பாட்டு எழுதிவியாமே, சோறு இல்லானா ஊர கொளுத்தலாம் னு சொன்னியாம், நான் நாஸ்தா துன்னு ரெண்டு நாள் ஆகுது, கொளுத்திடலமா? மீசை மட்டும் இவ்வளவு பெருசா வச்சிருக்க?" என்று பாரதியாரின் மீசையை தட்டி, பாபு கேட்பதை போல் கனவு கண்டு தூக்கத்தில் இருந்து அதிர்ந்து எழுந்தேன்.

5 comments:

  1. மிகவும் நல்ல _ கதை அல்ல, உண்மை நிலையை அப்படியே சொல்லும் _ செய்தி. அடையாளம் 2 எண்ணிக்கையில் அதிகமாக இருக்கலாம்.

    ReplyDelete
  2. Very good attempt Prashanth on your oru pakka Kathai... simple Tamil words but strongly conveying your thoughts... your inspiration is visible in many places like kamal, Bharatiyar, sujatha type writing style..and of course your favorite socialism in ending portion.. I have liked the story structure...

    ReplyDelete
  3. Very good attempt Prashanth on your oru pakka Kathai... simple Tamil words but strongly conveying your thoughts... your inspiration is visible in many places like kamal, Bharatiyar, sujatha type writing style..and of course your favorite socialism in ending portion.. I have liked the story structure...

    ReplyDelete
  4. The disgusting truth of the reality is brought out wonderfully sir. And the ending is amazing!

    ReplyDelete
  5. :) As usual... Climax as expected... Really good one...

    ReplyDelete

ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...