ஆலிவர் ரோடு ஏன் இடம் மாறி இருக்கு என்று எனக்கு புரியவில்லை. Amrutanjan நிறுவனம் இருக்கும் இடத்திற்கும் நாகேஸ்வர ராவ் பார்க்கிற்கும் இடையே ஆலிவர் ரோடு இருந்தது. அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன் தான் நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் பிடிக்க கிளம்பினார். ஐந்து நிமிடம் கழித்து உடம்பில் வலது பக்கம் பூரா வலிக்கிறது என்று போன் செய்தார். "எங்கே இருக்கே?" என்று கேட்டு நான் உடனே வருகிறேன் என்று சொன்னேன். நான் ஆலிவர் ரோடு சென்ற உடனே, அந்த கிளினிக் கண்ணில் பட்டது. அங்கே போயிருப்பார் என்று தெரிந்து உள்ளே சென்றேன். அப்பா "ஒன்றும் இல்ல டா, இப்போ கிளம்பினா கூட train பிடிச்சடலாம், நீ ஒரு வாட்டி டாக்டர் கிட்ட பேசிடு" என்றார். டாக்டர் இருக்கும் அறைக்கு சென்றேன், எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. நீல ஷர்ட், பழுப்பு பேன்ட் அணிந்திருந்தார். "உங்க அம்மாவை வர சொல்லு, அப்படியே பழைய reports வேண்டும்" என்றார். நான் ஏதோ பேச முற்படுவதற்கு முன் "reports and your mother" என்று ஸ்திரமாக சொன்னார். வெளியே வந்த உடனே டாக்டர் அப்படியே சௌரவ் கங்குலி மாதிரி இருந்தது தெரிந்தது, அந்த கோபமும் கூட!
நான் வெளியே வந்து அம்மாவுக்கு போன் செய்தேன், "வீட்டுக்கு வரேன் மா, நீ ரெடியா இரு" என்றேன்.என் வண்டியை காணவில்லை. புது வண்டி, கறுப்பு நிற ஹோண்டா அக்டிவா. அங்கே இருந்த செக்யூரிட்டி அப்படி, இப்படி தேடிவிட்டு "இதே வேலையா போச்சு, ரோடு கடைசியில ரெக்ஸ் இருக்கு ல, அதுக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு. அங்க mechanic எலாஸ்டிக் (elastic) னு கேளு. இந்த ஏரியால, வண்டிய தூக்கறது அவன் தான்" என்றான். elastic னு ஒரு ஆளுடைய பேரா?? தனுஷ் படத்தில் "அவுட்" என்ற character ஞாபகம் வந்தது. kutchery ரோடு போலீஸ் ஸ்டேஷன் செல்லலாமா என்று யோசித்து கொண்டே நடந்து வந்தேன். ரோடு ஓரத்திலிருந்து பார்க்கும் பொழுது அந்த வீட்டில் ஒரு பழமை தெரிந்தது. வண்டி திருடற கும்பல் இடத்திற்கு போகலாமா என்ற யோசனை. ஒரு திடீர் தைரியம் (sudden bout) - சென்றேன்.
ஒரு பெரிய கேட் போட்ட பெரிய வீடு, வீட்டிற்கு முன்னே நிறைய திறந்தவெளி, பழமை கவ்வியது. பச்சை கலர் பெயிண்ட் கதவிற்கும், ஜன்னல்களுக்கும் அடித்திருந்தார்கள். மழை பெய்து, சுவரில் சுண்ணாம்பு கொஞ்சம் கூட விட்டு வைக்கவில்லை, கொஞ்சம் கரி தட்டி இருந்தது. அந்த வீட்டை நெருங்கிய பொழுது, முகப்பு அறையில் சிலர் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தது தெரிந்தது. அதில் ஒரு முகத்தை கொஞ்சம் கூர்ந்து பார்த்த பொழுது, எனது பழைய அலுவலகத்தின் பாஸ் தெரிந்தார். நான் "mechanic எலாஸ்டிக் இருக்காரா?" என்று கேட்பதற்கு பதிலாக, என் பழைய பாஸ் பெயரை சொல்லி கேட்டுவிட்டேன்.
என் பழைய பாஸ் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு blog பத்தாது. என் முதல் வேலையின் பாஸ் அவர், திறமைசாலி, புத்திசாலி, கடுமையாக உழைப்பவர். எனக்கு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தார். அலுவலகத்தில் நல்ல பெயர் உடையவர். எனக்கு முதல் வேலை, bachelor days - இளங்கன்று பயமறியாது என்பதை போல, அரசியலுக்கு அப்பாற்பட்டு என் வேலையை நான் செய்வேன். எங்கள் அலுவலகத்தில் அரசியல்
செய்யவில்லை என்றால் பிழைக்க முடியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு அலுவலக அரசியல் காரணமாக, எனக்கும்
அவருக்கும் ஒரு misunderstanding வந்தது. நான் அந்த வேலையை விட்டு வந்து நான்கைந்து வருடங்கள் ஆகி விட்டது. அதனால் அவர் அங்கே இருப்பது கொஞ்சம் குழப்பமாக இருந்தது. ஏன் அவர் இருக்காரா என்று கேட்டோம் என்று தயங்கினேன்.
அவர் வெளியே வந்து, "எப்படி டா இருக்கே" என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றார். அந்த வீட்டின் அமைப்பும், உள்ள மனிதர்களும் கொஞ்சம் வித்தியாசமாக தென்பட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு உடல் உறுப்பு கொஞ்சம் அளவுக்கு அதிகமாக இருப்பது போல் தோன்றியது. மூக்கு பெரிதாக, காது கொஞ்சம் பக்க வாட்டில் நீளமாக, கொஞ்சம் குள்ளமாக, தலை வீங்கினால் போல் - ஏதோ சொல்ல தெரியவில்லை. நிறைய பேர் இருந்தார்கள்; கூட்டு குடும்பம் போல தெரிந்தது. நிறைய சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தார்கள். வீட்டில் ஒரு மங்கலான வெளிச்சம், இருட்டு இருந்தது என்றே சொல்ல வேண்டும். எனக்கு இருட்டு பிடிக்காது. "என் வண்டியை காணோம்" என்று சொன்ன உடனே புரிந்து கொண்டார்கள். என் பாஸ் "எலாஸ்டிக் எங்கே" என்று கேட்டார். Ritchie street போயிருப்பதாக சொன்னார்கள். என்ன வண்டி? என்றார்கள். கறுப்பு அக்டிவா, நம்பர் கூறினேன்.
அவர்கள் பாட்டி போல ஒருவர் காபி சாப்பிடறியா என்று கேட்டாள். தலையில் டை அடித்திருந்தாள், நைட்டி அணிது கொண்டிருந்தாள். வண்டி திருடன் வீட்டில் விருந்து உபசாரம். "இல்ல - என் வண்டி வேணும்" என்றேன். எனக்குள் ஏதோ ஒரு தயக்கம் இருந்தது. கோபம் வர வேண்டிய இடத்தில், கொஞ்சம் தர்ம சங்கடம் போல உணர்ந்தேன். கீழே போய் பார்க்கலாம் வா என்று அழைத்து சென்றார்கள். வீட்டிற்கு உள்ளேயே வழி இருந்தது. உள்ளே ஒரு அறையை தாண்டி செல்லும் பொழுது. நான்கைந்து பேர் தரையில் உட்கார்ந்து ஒரு தட்டில் செம்மண் போல ஏதோ ஒன்றை வைத்து, அதிலிருந்து ஆளுக்கு ஒரு ஒயர் சொருகி வைத்து, ஒயரின் மறுமுனையை தலையில் வைத்திருந்தார்கள். ரொம்ப விநோதமாக இருந்தது.
வீட்டின் கடைசியில் ஒரு படிக்கட்டு போனது, basementக்கு போனது. அந்த பழைய வீட்டில் basement கட்டுமானமா? வியந்து போனேன். அதுவும் பழங்கால அரண்மனைகளில் சுரங்கபாதை இருப்பது போல் கொஞ்சம் ரகசியமாகவே இருந்தது. இரண்டு அடுக்கு கீழே சென்றோம். கீழே மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் இருக்கும் சந்து வீட்டின் ஒண்டு குடுத்தனம் போல சின்ன சின்ன அறைகள். சில அறைகள் பூட்டி இருந்தது. ஒரு அறையை திறந்து காண்பித்தார்கள். இது தான் லாஸ்டா வந்த வண்டி. அக்டிவா இல்லையே. Splendor எடுத்துக்குங்க என்றார். இல்ல என் வண்டி தான் வேணும் என்றேன். அப்போ எலாஸ்டிக் வந்த உடனே கேட்கலாம், என்று மீண்டும் மேலே அழைத்து வந்தார்கள்.
அங்கே ஒரு நடு வயது பெண் மயங்கி இருந்தாள், அவளை சுற்றி அனைவரும் தண்ணீர் கொண்டு தெளித்து, விசிறி கொண்டும் இருந்தார்கள். என் கூட வந்தவர், "சித்தியை அப்படியே விட்டுடுங்க, தூங்கி போய்டுவா. எழுந்தா BP ரொம்ப shoot ஆயிடும், control பண்ண முடியாது" என்று சொன்னார். அவளை தூக்கி கொண்டு ஒரு அறையில் படுக்க வைத்தார்கள்.
இதோ வந்துட்டானே எலாஸ்டிக் என்று சொன்னார்கள். எலாஸ்டிக் என்பவனுக்கு பதிமூன்று, பதினான்கு வயதிருக்கலாம். குழந்தை முகம். இவனா வண்டி திருடன். ritchie street வஸ்துக்கள் ஏதோ open செய்து ஒயரும் கையுமாய் இருந்தான். அவனை பார்த்தால் ஒரு மேதாவி போல் எனக்கு தோன்றியது (Child prodigy) - ஏன் என்று தெரியவில்லை. இவன் santhome ஸ்கூலில் படித்தானா? என்று சம்பந்தமே இல்லாமல் கேள்வி கேட்டேன். அவன் என் முகத்தை கூட பார்க்கவில்லை. "ஆமாமாம்" என்று கேலியாக சிரித்து கொண்டே ஒரு பெண் கூறினாள்.திடீரென்று என் கழுத்தில் யாரோ கையையோ காலையோ வைத்து அழுத்தினார்கள்!
என் நான்கு வயது மகன் என் கழுத்தில் தன் காலை போட்டு எழுப்பும் வரை, இதை படித்து கொண்டிருக்கும் உங்களை போல, இது ஒரு விசித்தரமான கனவு என்று எனக்கும் தெரியவில்லை! திரும்ப படித்து பார்த்தால் கொஞ்சம் சிரிப்பு வரும்!
(கொஞ்சம் exaggeration சேர்ந்த உண்மை எப்பொழுதும் சுவாரசியம் என்பார் சுஜாதா)
Super.
ReplyDeleteSuper.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuthi poda solli unga amma-vai. Hammer I meant.
ReplyDeleteSuperb. Excellent writing. Sujatha influence illai, sujathave thaan. I remember some of Sujatha's comments about Pattukottai Prabhakar who followed Sujatha's style of writing in total. Sujatha did not indict him but gave him some useful suggestions for creativity.
ReplyDeleteFirst one maadhiri ila.. Very interesting! An additional like to sriku's comment as well!
ReplyDelete"இசை" படம் பார்த்த மாதிரி இருக்கு!! வாழ்த்துக்கள்...
ReplyDeletePrashanth - super da
ReplyDelete