Tuesday, 9 August 2022

தொடர் நிகழ்காலம்

பீடிகை:

எந்த விஷயத்தை சொன்னாலும், அதற்கு முன் வாசிப்பவர்களை தயார் செய்ய வேண்டும்.  என் blog படிப்பவர்களுக்கும், என் மாணவர்களுக்கும் இது நன்றாக தெரியும். தலைப்புக்கும் எழுதுவதற்கும் correlation coefficient பாசிட்டிவாக தான் இருக்க வேண்டும். அந்த கருத்தின் தீவிரத்தன்மையை உள் வாங்குவது அவரவர் beta coefficienடை பொருத்தது.  இந்த அவசர உலகில் சிலர் ஒரு இரண்டு மூன்று நிமிட youtube விடியோவை கூட பொறுமையாக பார்ப்பதில்லை. cursor கொக்கியால் கடைசி வரை தள்ளி, கிளைமாக்ஸ்கு செல்லும் அவசர பிராணிகள் அவர்கள் (சிலர் எனக்கு தெரிந்த செல்ல பிராணிகள் தான்). அவர்களுக்கான செய்தி: இந்த bloகின் முடிவு AR ரஹ்மான் இசையில் "நதி போல ஓடி கொண்டிரு" கொண்ட BGமோடு தான் முடிய போகிறது. 

களம் அமைத்தல்:

நான், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்தான் இதை உணர்ந்தேன். என் நண்பரும் ஆசிரியருமான பரமன் அவர்களின் பதிவுகளின் செய்திகளை படிக்கும் பொழுது இது புலப்பட்டது. அவர் எழுதும் கருத்துக்கள் ஆழமாக இருப்பதோடு அல்லாமல், அது ரசிக்கும் படியாகவும் இருக்கிறது. காரணம் :அது பெரும்பாலும்  தொடர் நிகழ்காலத்தில் உள்ளது. (Google செய்யாதீர்கள்: Present continuous tense). இந்த இலக்கண அமைப்பு சொல்லிற்கு அழகு சேர்ப்பதோடு, நமக்கும் ஒரு உற்சாக செய்தியை சொல்கிறது. என்ன செய்தி என்பது தான் இந்த blog! (சில வருடங்களுக்கு முன்னாள் என் மாணவி சுமேதாவுடன்  (சுப்ரஜாவா???, அவர்கள் இரட்டையர்கள்) Grammar nazi  பற்றி நடத்திய விவாதம் ஞாபகம் வருகிறதே)

கரு:

என் நண்பன் ராமகிருஷ்ணனின் whatsapp statuசில் உள்ள "The show must go on" என்பதே அடிப்படை செய்தி. ஜெயமோகன் எழுதிய அறத்தின் அதிசய மனிதரில் ஒருவர் முதுகு தண்டு ஒடிந்து சிகரத்தின் உச்சியை அடைந்த கதை கண்டிப்பாக ஞாபகம் வரும். எது நடந்தாலும் நதி போலே ஓடி கொண்டிரு என்பது உயரிய லட்சியம் தான். ஆனால் இந்த bloகில் அது போல textbook prescription செய்யாமல் கொஞ்சம் மாறுபட முயற்சிக்கிறேன் ("முயற்சிக்கிறேன்" என்று தொடர் நிகழ்காலத்தில் வேண்டுமென்றே தான் எழுதினேன், எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா, அதில் ஒன்று, இந்த அற்ப சந்தோஷம்   :) )

கதையில கொஞ்சம் ட்விஸ்ட் வேணும்பா:

happiness quotienடை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு மட்டுமே இனி நான் எழுத போவது. (நீங்கள் அந்த வகையறா இல்லை என்றால், இது வரை படித்ததை, பீச் சுண்டல் மடித்த பேப்பரில் வரும் ஆதியும் அந்தமும் இல்லாத செய்தியை படித்ததை போல் நினைத்து கொண்டு ctrl +w  செய்து விடுங்கள்). வாழ்க்கையில் மகிழ்ச்சி எல்லாம் வேண்டாம், பிரச்சனை இல்லாமல் இருந்தா போதும் என்று ஏங்கும் பலர் இருக்க்கின்றனர். அவர்களுக்கும் இது பொருந்துமென நினைக்கிறேன்.

நமது நிகழ்காலத்தில் நடப்பவைகளே நமது மகிழ்ச்சியையோ (அல்லல் படுவதையோ) தீர்மானிக்கிறது. அது நாம் முன்னால் (கடந்த காலத்தில்) செய்த செயல்களாலும், முடிவுகளாலும் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் (வடிவேலு சொல்வது போல் "கொஞ்சம் நஞ்சம் ஆட்டமாடா ஆடினீங்க???). ஆனால் நமக்கு நடப்பவைகளை அப்படியே ஏற்று கொள்ளாதீர்கள். முட்டி மோதி மாற்றி கொள்ளுங்கள் (1999 WC Lance Klusener ஆடியதை பாருங்கள்). 

கொஞ்சம் தியரி பார்ப்போம்:

நமக்கு நடப்பவைக்கு இரண்டு காரணம்:

1. நாம்

2. எனக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லபா

காரணம் 2 வை கொஞ்சம் கவனமாக வரையரைப்போம்: இது நமது கட்டுப்பாட்டிற்கு கொஞ்சம் கூட எட்டாதவைகள் (Corona lockdown எப்போ முடியும் போன்றவை). கா. 2வை பற்றி நினைத்து மனசோர்வை பெறுவதால், நீங்கள் கா.1க்கு முன்னேறி விடுவீர்கள். (பின்தங்கியா?)

காரணம் 1 பாப்போம்:

நம் அன்றாட வாழ்வின் பிரச்சனைகளாக வருவது (பெரும்பாலாக):

1. ஆரோக்கியம்
2. பணம் / வேலை
3. உறவுகள்


இந்த மூன்றிலும் சிக்கல்கள் இருப்பின், நீங்கள் FM போட்டு கொண்டு நதி போல ஓடி கொண்டிருத்தல் கூடாது. இந்த மூன்றுக்கும் பொறுப்பை எடுத்து கொள்ளுங்கள். பிரச்சனைகளை ஏற்று கொள்ளாதீர்கள், தீர்வு தேடுங்கள்.

1. ஆரோக்கியம்: யோகா சேருங்கள், நடைப்பயிற்சி செய்யுங்கள், மாடிப்படி ஏறுங்கள், உணவு பழக்கங்களை மாற்றுங்கள், சூரிய ஒளி, காற்று, மொட்டை மாடிக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள், whatsapp மூலம் வரும் health tips குறிப்புகளை forward செய்வதோடு கொஞ்சம் செயல்படுத்துங்கள். சுவரில்லாமல் சித்திரம் ஏது??. என் யோகா ஆசிரியை, சவாசனத்தில் "inhale gratitude, exhale surrender " என்று சொன்னது ஞாபகம் வருகிறது

2. பணம்/வேலை : இதை பற்றி இன்னொரு bloகே எழுத வேண்டும். இரத்தின சுருக்கமாக சொன்னால்: உங்கள் தேவைகளை கொஞ்சம் ஆராய்ந்து ஒரு இலக்கை அமைத்து கொள்ளுங்கள், அது multiple லெவல் ஆக இருந்தால் இன்னும் சிறப்பு (வானவில்லை போல் அமைத்து கொள்ளுங்கள்). மற்றவர்களை குஷி படுத்த வேண்டியவற்றை கொஞ்சம் பின்னால்  தள்ளுங்கள். இன்னும் பணம் சம்பாதிக்க வழி தேடுங்கள், இருக்கும் இடத்தில பணி உயர்வுக்கு பாடு படுங்கள், சனி ஞாயிற்று கிழமைகளில் என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். உங்கள் தகுதியை உயர்த்தி கொள்ளுங்கள், மேலும் படியுங்கள். நம்பிக்கையோடு வாய்ப்பை தேடுங்கள், எல்லா புலன்களையும் கூராக்கி கொள்ளுங்கள், இன்டர்நெட்டில் தேடுங்கள்.

3. உறவுகள்: இதற்கு ஒரே காரணம் தான்: Ego என்னும் அரக்கன்! தீர்வு: பேரன்பை போல் வேறில்லை!

ஆதாரமா சொல்ல வருவது: விட்ராதிங்க எப்போவ்! "என் தலை எழுத்து" என்று இருந்து விடாதீரகள், மெனக்கெடுங்கள், தேடுங்கள், உடலை வருத்தி தீர்வு காணுங்கள், முன்னேற்றம் வரும். நம் வாழ்க்கையின் சிற்பி நாம் தான். (ஆல் இன் ஆல் அழகுராஜா கவுண்டமணி ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)  

நம் அன்றாடம் செய்யும் செயல்கள் நமது அன்பின் வெளிப்பாடாக அமைந்தால், தலைப்பில் இருக்கும் இலக்கணத்தை போல Present continuous ஆக இருப்பதோடு வாழ்க்கை continuous present ஆக அமையும் (பஞ்ச் வெச்சு தான் முடிப்போம்).

முடிவுரை:
எனக்கு blog எழுதுவதற்கு உண்டான எண்ணம் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் தோன்றும். தூங்க விடாமல் மூளையை சுறுசுறுப்பாக்கி விடும். சனி கிழமை அதி காலை கிரிக்கெட் வைத்து கொண்டு, முன் நாள் இரவு படுக்கும் பொழுது, இந்த blog தோன்றியது. மூன்று நாட்கள் கழித்தே இதை எழுதுகிறேன் (Present continuous). மூன்று நாட்களாக நடந்த அன்றாட நிகழ்வுகளின் அலுப்பு தட்டி, கரு நீர்த்து போகாமல், உணர்வுகளை அப்படியே எழுத உதவிய என் மூளையின் நரம்பு பட்டைகளுக்கு ஒரு சூடான காபி பரிசளிக்க வேண்டும்!



 



ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...