Thursday, 11 December 2014

ரன்னர் மேட்ச்


அன்று

நாங்கள் இருப்பது ஒரு வாடகை வீடு; இப்பொழுது நிறைய மாறிவிட்டது. நான் எழுதுவது ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்  இருந்ததை பற்றி (இன்னும் கூட முன்னே). மற்றும் இதை எங்களை போல் நிறைய cricket சுவாசித்தவர்களால் இன்னும் relate செய்ய முடியும் என்று நம்புகிறேன். இதில் வருபவர்கள் கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல; என் நண்பர்கள் என்பதால் பெயரை கூட மாற்ற போவதில்லை. எங்கள் வீடு ஒரு குட்டி colony போன்ற அமைப்பு என்று கூறலாம். நிறைய portionகள் இருந்த ஒரு வீடு; ஆனால் ஒண்டு குடித்தனம் இல்லை; தனி தனி portion. நிறைய மரங்கள், நிறைய திறந்த வெளி இருந்தது. நிறைய நண்பர்கள்!

வீட்டிற்குள் நுழைய ஒரு சிறு gate உண்டு; வீட்டின் சொந்தகாரர் மட்டும் car வைத்திருந்தார்; அது செல்ல தனியே பெரிய gate. car நிறுத்த ஒரு பெரிய shed. வீட்டிற்கு நுழையும் இடத்தில ஒரு திறந்த வெளி - எங்கள் cricket ground! அது ரொம்ப பெரியதும் கிடையாது, சிறியதும் கிடையாது; cricket விளையாடுபவர்களுக்கு இது புரியும் - bowling போட்டு விளையாட முடியாது, under arm அளவிற்கு சிறியதும் இல்லை. அது தான் எங்கள் உலகம். ஒரு பக்கம் சுவற்றிலே கோடு வரைந்த stump, இன்னொரு பக்கத்திலே சுவறு தான் boundary, எனவே வேறு ஒரு திசையில் (பக்கவாட்டில்) இருக்கும் சுவறு தான் stump. அந்த grounடின் சரியாக நடுவே, ஓரத்தில் ஒரு அரளி செடி உண்டு, ஒரு ஓணான் குடும்பமும் வசித்து வந்தது. அதை தாண்டி பந்து சென்றால் தான் legitimate runs. batting creaசுக்கு பின்னால் மனோரஞ்சித மரம் உண்டு. மிகுந்த வாசனை கொண்ட பூக்களை கொண்டது. தெருவில் நடக்கும் சிலர் அதை பறிக்க வருவார்கள். சிறுவர்களானால் நாங்களே மிரட்டி அனுப்புவோம், கொஞ்சம் கெட்ட வார்த்தை பேசும் அளவுக்கு இருந்தால் சக்தி அண்ணனை கூப்பிடுவோம். அவர் தான் எங்கள் வீட்டு சொந்தக்காரரின் மகன். சுமார் இருபது ஐந்து வயது இருக்கும், தைரியசாலி, எல்லா வேலைகளும் செய்வார் - தோட்ட வேலை, plumbing, carpentry - எங்கள் வீட்டிற்கு வெளி ஆட்கள் வேலைக்கு வந்ததே இல்லை. அவர் சகலகலா வல்லவர். நாங்கள் விளையாடும் பொழுது ஒரு ஓவர் "காஜி" (இதை ஆங்கிலத்தில் எழுதவே கூடாது) போட வேண்டும்.

விஜயராகவன் என்ற விஜய் தான் கிரிக்கெட் சாம்பியன், அவனை out ஆக்கவே முடியாது. முரட்டுதனமாக boundary அடிப்பான். அபாரமாக விளையாடுவான். bat, ball போன்றவையும் கொண்டு வருவான், அவன் வைத்தது தான் சட்டம். ஒரு மாதிரி Dominant என்று சொல்லலாம். அவன் வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப நல்லவர்கள், வைணவ சம்ப்ரதாயங்களை கடைபிடிப்பார்கள், ஒழுக்கம், நெறிமுறை போன்றவை தான் அவர்கள் வீட்டிற்கு முக்கியம். அவர்கள் வீட்டிற்கு நாங்கள் செல்ல மாட்டோம், வாசலில் தான் நின்று பேசுவோம்.ஏனோ தெரியவில்லை. அவனுக்கு ஒருவர் வீட்டிற்கே வந்து violin சொல்லி கொடுப்பார். அவர் வரும் பொழுது ஒரு boundary அடித்து விட்டு உள்ளே ஓடுவான், ஒரு மணி நேரம் கழித்து வந்து விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து அடிப்பான். அவன் வரும் வரை புதிய match விளையாடினாலும் அவன் வந்தால் அப்படியே அதை கைவிடுவோம். அவன் cousin ஒருவன் பத்மநாபன் என்ற பப்பா படிப்பதற்காக இவர்கள் வீட்டில் இருந்தான். அவன் சுமாராக விளையாடுவான். ஆனால் எப்பொழுதும் விஜய் சொல்வதை தான் correct என்று சொல்லும் ஜால்ரா.

விஜயின் நண்பன் கணேஷ்ராம் பக்கத்துக்கு தெருவில் வசிப்பவன், அவன் திடீரென்று கோபப்படும் சுபாவம் கொண்டவன். விஜயும் அவனும் ஒரே பள்ளி ஒரே கிளாஸ் - இருவர்க்கும் எல்லா விததிலும் போட்டி உண்டு. விஜய் மாற்ற விஷயங்களிலும் dominant ஆக தான் இருந்திருக்க வேண்டும். இவர்கள் இருவரும் சண்டை போடுவதில் பார்த்தால் புரியும்.கணேஷ்ராம் அதிரடியாய் ஆட மாட்டான், ஆனால்அவன் விளையாட்டில் ஒரு மென்மையான அழகு இருக்கும் -கொஞ்சம் மிகை படுத்தி கூறினால் mark waugh நான்கு slip, gully நடுவே அடிக்கும் square cut போல இருக்கும். 

இனி என் இனிய நண்பன் - ஷங்கர் என்னும் காக்கா, தெலுங்கு பேசுபவன், இடது கை பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் artistic and creative என்று கேள்வி பட்டிருப்போம். இவன் இப்படி தான். நான் இந்த வீட்டிற்கு குடி வந்த பொழுது ஷங்கர் batting ஆட விஜய் bowling போட்டு கொண்டிருந்தான் - ஷங்கர் போட்டு கொண்டிருந்த kapil dev sweater கூட ஞாபகம் இருக்கிறது (இதை படித்து கொண்டிருக்கும் ஷங்கர் - அது முன்னே V shape இல் இருக்கும், பழுப்பும் browனும் சேர்ந்த அசிங்கமான கலர்). அவனுக்கு skin allergy வருவதால் மருத்துவர் மண்ணில் விளையாட கூடாது என்று சொல்லி விட்டார். அவன் அம்மா வெளியே சென்றவுடன் எங்களுடன் விளையாடி, அம்மா திரும்பும் பொழுது மாட்டி கொள்வான். நானும் அவன் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன். அம்மா வந்ததும் கை கால் கழுவி புத்தகத்தை எடுத்து உட்கார்ந்து கொள்ளும் எமகாதகன். எனக்கு அவ்வளவாக நடிக்க வராது. ஷங்கர் left hand என்பதால் நாங்கள் bowling போடுவதில் கொஞ்சம் சிக்கல் இருக்கும். திறமை சாலி, நன்றாக விளையாடுவான். நிறைய விளையாடியதில்லை; அம்மா வீட்டில் இருந்தால் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பான், சண்டை வந்தால் அவனிடம் செல்வோம். விஜய்க்கு பயப்படாமல் out என்றால் out தான் என்று தீர்ப்பு சொல்லும் நாட்டாமை. எனக்கு பள்ளியில் எதாவது project work இருந்தால் ஷங்கர் தான் செய்து கொடுப்பான். எனக்கு படம் வரைவது, craft work செய்வது, ஓட்டுவது, வெட்டுவது போன்ற எதுவுமே வராது. fevicoலின் வாசனை மட்டும் தான் பிடிக்கும். கையெழுத்தும் கோழி கிறுக்கல். முன்னெல்லாம் கல்யாணங்களில் தேங்காய் பழத்துடன் ஒரு சிறிய கண்ணாடி கொடுப்பார்கள். ஒரு notebook அட்டையை மடக்கி, வெட்டி, அதில் இந்த கல்யாண கண்ணாடியை பொருத்தி எனக்கு ஒரு periscope செய்து கொடுத்தான். வல்லவன்! 

ஷங்கரின் அண்ணன் ரமணி - அதி புத்திசாலி! cricket எல்லாம் ஆடவே மாட்டான். எப்பொழுதும் படிப்பு தான். பாடம் எல்லாம் சீக்கிரம் முடித்து விட்டு வேறு ஏதேதோ படிப்பான். எங்களுக்கு எல்லாம் quiz வைப்பான். cricket விளையாடாமல் புத்திசாலியாய் இருக்க முடியுமா என்று எனக்கு எப்பொழுதும் சந்தேகம் உண்டு. ஆனால் cricket பற்றிய எல்லா விவரமும் அவனுக்கு தெரியும். நாங்கள் computeரை பாட புத்தகத்தில் படமாக பார்த்த பொழுது அவன் ஒரு வங்கிக்கு ஏதோ computer வேலை செய்து கொடுத்தான். 

என்னை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். அந்த கும்பலில் நான் தான் இளையவன். மிக ஒல்லியாக இருப்பேன். cricket தான் என்னுடைய உடல்-பொருள்-ஆவி எல்லாம். crickeடுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்வேன். விளக்க வேண்டும் என்றால் - வெறி என்ற வார்த்தையில் உள்ள கெட்ட பண்பை நீக்கி விட்டால் அது தான் சரியான வார்த்தையாக இருக்கும். cricket ரொம்ப சுமாராக தான் ஆடுவேன், ஆனால் ஒவ்வொரு matசும் எனக்கு உலக கோப்பை final தான். பந்தை தாவி பிடித்து அடிபட்டது கொஞ்சம் நஞ்சம் அல்ல. Jonty rhodes மீது அளவில்லா பற்று. எல்லா விளையாட்டிலும் ஜெயிக்க வேண்டும். திறமையை விட உணர்வே அதிகம்! 

இப்படி இருக்க நாங்கள் விளையாடுவதில் ஒரு மாற்றம் தேவை பட்டது. எப்பொழுதும் போல விளையாடுவதில் விஜய் மட்டும் நன்றாக விளையாடி, நாங்கள் அனைவரும்சீக்கிரமே out ஆவதால் இந்த ஏற்பாடு. ரன்னெர் மேட்ச் என்று பெயர் வைத்தோம். இரண்டு பேர் batting செய்வார்கள்;ஒருவன் bowling போடுவான், ஒரே ஒரு fielder தான் (இன்னும் ஒருவன் இருந்தால் அவனை keeping செய்ய சொல்வோம்). இப்பொழுது ஒருவன் out ஆனால், அவன் fielding siடுக்கு வந்திட வேண்டும். fielding செய்பவன் batting செய்வான். இப்படி ஒரு சுழற்சி முறையில் இருக்கும் நான்கு அல்லது ஐந்து பேர் batting bowling என்று மாற்றி மாற்றி விளையாடுவோம் - பத்து wicket விழும் வரை. பின்னர் நாங்களே chasing team ஆக மாறி விடுவோம். இதனால் ஒரு endடில் விஜய் நின்றாலும் எங்கள் அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு நாங்களே பெயர் சூட்டி கொள்வோம். இந்திய பாகிஸ்தான் தொடர்கள் எல்லாம் நடத்தி இருக்கிறோம்.

நிறைய நிகழ்வுகள் நடந்திருக்கிறது - நாங்கள் விளையாடும் இடத்தில் ஒரு meter board இருந்தது, அதற்கு ஒரு மரக்கதவு.படித்து கொண்டிருந்த ரமணி திடீரென்று நான் ஒரு over batting ஆடுகிறேனென்று ஆட, அவன் அடித்த பந்து அந்த meter board கதவை உடைத்து. அடுத்த நிமிடம் - அனைவரும் பிடி ஓட்டம். எல்லோரும் வீட்டிற்கு ஓடினோம், விஜய் தான் வந்து உடைந்த கதவை அப்படியே பொருத்தியாவது வைப்போம் என்று அடுக்கி வைத்தான். சக்தி அண்ணா எங்கள் crickeடை கொஞ்ச நாள் தடை செய்து விட்டார். பிறகு நாங்கள் எல்லோரும் சேர்ந்து கெஞ்சியதில் தடை நீக்கப்பட்டது.

அந்த காலனியில் இருந்த ஒரே பெண் காயத்ரி, அவளும் சில நேரங்களில் நாங்கள் விளையாடுவதை பார்க்க வருவாள். நன்றாக படிக்கும் கெட்டிக்காரி. ஒரு முறை நான் misfield செய்வதை கிண்டல் செய்தாள். ஒரு மிருகத்தின் பெயர் சொல்லி திட்டிவிட்டேன். என் அம்மாவிடம் சொல்லி விட்டாள். என் அம்மாவை பற்றி தான் ஏற்கனவே சொன்னேனே - அவள் ஈபிகோவில் இது non-compundable offence.அவள் வீட்டிற்கே சென்று அவள் அப்பா அம்மா இருக்கும் பொழுது மன்னிப்பு கேட்டேன்.

சுசீலா வீடு வேலை செய்பவள். ஒரு முறை என் அண்ணனும் நான் high catch practice செய்யும் பொழுது அவள் குறுக்கே வந்து விட்டாள். முன்பல் இரண்டும் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். பந்து பட்டு பல் உடைந்து விட்டது. சக்கரையை அமுக்கினோம். "பார்த்து விளையாடு புருஷோத்து" என்று சொல்லிவிட்டு சென்றாள் (அவள் என் பெயரை அப்படி தான் சொல்வாள்).

விளையாடி முடித்தவுடன் cricket பற்றி பேசுவோம். இப்பொழுது வரும் preview show - post match analysis எல்லாம் உண்டு. ஷங்கர் ஒரு diaryயில் cricket statistics எல்லாம் வைத்திருப்பான். 2015 ஆண்டு உலக கோப்பை எங்களை போன்றவர்களுக்கும், உலகில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்ப "காதலர் தினத்தன்று" தொடங்குகின்றது.
இன்று

ரமணி -அமெரிக்காவில் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் இருக்கிறான் (அதன் நிறுவனரா என்றுதெரியவில்லை, ஆனால் மிக முக்கிய இடத்தில இருக்கிறான்). 

ஷங்கர் -அண்ணா பல்கலைகழகம்- infosys நிறுவனம் - அமெரிக்கா பயணம் - இந்தியாவுக்கு திரும்ப வந்து தானே ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறான்.சுஜாதா இவனிடம் பேசி இருக்கிறார் - இதற்கு மேல் ஏதும் இவனை பற்றி சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்.

விஜய் - பப்பா - கணேஷ்ராம் - என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.

காயத்ரி - ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் பம்பாயில் இருக்கிறாள்.
நான் - இன்றும் cricket விளையாடி கொண்டே தான் இருக்கிறேன். திறமையில் ஏதும் மாற்றம் இல்லை, உணர்வில் ஏதும் குறையவில்லை. என் மகனை "Organic" ஆக வளர்க்க வேண்டும் என்றெண்ணி திறந்த வெளியை தேடி கொண்டிருக்கிறேன்.

எங்கள் வீடு -நான் அதே வீட்டில் தான் வசித்து வருகிறேன். நிறைய structural மாற்றங்கள். திறந்த வெளி கொஞ்சம் கூட இல்லை. அண்டை வீட்டில் இருப்பவர்களின் பெயர் கூட தெரியாது.எங்கள் மைதானம் அதே போல் தான் இருக்கிறது. அங்கே ஒரு car நிற்கிறது. கடந்து செல்லும் பொழுது எல்லாம் cricket நினைவுகளே!

முடிவுரை:  என்னை பொறுத்த வரை இதற்கு எப்படி முடிவுரை போடமுடியும் என்று தவிக்கிறேன். இந்த தவிப்பு ஒரு வித சுகமே. சரியாக சொல்ல போனால் என் மனதில் இருந்ததில் ஒரு துளி கூட சொல்லி முடிக்கவில்லை. இதை ஒரு தொடர்கதையாய் எழுதினால், mega serial தோற்று போகும். நீங்களும் அப்படிதான்! உங்கள் கதையும் அப்படிதான்!

இளமை பருவம் பேரின்பமே!

Saturday, 1 November 2014

Snippets


முதல் துணுக்கு

சுறுசுறுப்பான மதிய வேளை; நானும் என் மகனும் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தோம்; அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று மூன்று வயதில் இருந்தே "training" கொடுக்க வேண்டும் என்று எனக்கு ஒரு எண்ணம்.  என் மகனுக்கு நல்ல episode கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். பார்சல் (parcel) வாங்கும் இடத்தில் ஒரு நடு வயது மனிதர் கத்தி கொண்டிருந்தார். என்ன பிரச்சனை என்று நான் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் தினம் அங்கே ஒரு கூச்சல் குழப்பம் இருக்கும். தோசை புளிப்பு, பூரிக்கு பதிலாக சப்பாத்தி, தேங்காய் சட்னி இல்லை, தாமதமாக பார்சல் போன்ற தினம் ஒரு திருக்குறள். அன்றும் அது மாதிரி தான். பார்சல் செய்யும் வடகிழக்கு பணியாளன் அவர் சொல்வதற்கு முகம் கூட திருப்பி பார்க்கவில்லை. எவ்வளவு பேரை பார்த்திருப்பான். அந்த மனிதர் மேலாளரை அணுகினார். அவருக்கு இந்த மாதிரி ஆட்களை எதிர்கொள்வதில் அனுபவம் இன்னும் அதிகம். அவர் சொன்னதை கேட்டுவிட்டு "sorry" என்றார். திடீர் என்று அந்த மனிதருக்கு கோபம் குறைந்தது. கொஞ்சம் தாழ்வான குரலில் "being sorry என்பது ஒரு உணர்வு, வெறும் வார்த்தை அல்ல. நாம் அன்றாடம் அதை வெறும் வார்த்தையாக, மூச்சுகாற்றாக பயன் படுத்துவது sorry யான நிலைமை தான்" என்று சொல்லிவிட்டு விருட்டென்று சென்றார். எனக்கும் "food for thought".

Number two

People born in early 80s would understand what i am saying - we have watched television like no body else. The advent of satellite television happened at a very appropriate age to us. Having watched test cricket in doordarshan - star TV (Prime sports as it was called then) was heaven. Remote controls to change channels - even more ecstatic. I never used to switch off my television. I come from school and switch it on and i think my mom will switch it off after i leave to school. I have watched every single cricket match and its highlights. I have watched every single english movie - literally from dawn to dusk. I would say it contributed more to my vocabulary than my school. M Tv used to play a popular hindi song 10 times a day - i have watched it without changing channels during commercials. The horizon kept enlarging - with new channels being introduced; and I remember my cable operator increasing the monthly tariff by saying - 100 channels. 

Why that prelude about TV channels? On a recent sunday afternoon, i tuned into doordarshan podhigai. Ya - you get the drift - I am one of those guys who is affected by this "problem of plenty" television channels and "sensationalise everything" culture - be it sports, movies, news or anything. I get a breaking news that MSD won the toss and elected to field. And there is breaking news 24/7 on all the news channels. Everything today has to be breaking news. I started looking for the "non- breaking" news i would say.  Forget it. 

Lets go to doordarshan podhigai. There was an interview of a mid 50 guy. For no reason i stayed on with the channel and i am glad that i did. The person who was being interviewed was a school dropout from a village, hails from a family of agriculturists and currently has a showroom that deals with servicing electronic goods and selling / servicing cameras. As the interview progressed he started talking about his passion - cameras. He is housing 2000 vintage cameras in his possession and even displayed it a couple of times in an exhibition at the Chennai trade center at its own cost. He helps young students studying visual communication courses to do their projects. 

Then he went on to narrate this - He lives in a rented house amidst the bustle in the heart of chennai, a two storeyed shop cum residence. In his terrace, he feeds parrots. "Thats not new" - i thought. But i stayed on. he feeds 20 kilos of grains in the morning and evening and about 500 to 600 birds fly in and eat in his small terrace. Even more interesting is that, the grains have to be soaked in water, so that it is easy for the birds to eat. And to avoid troublemakers on the road, he stands guard for two hours in the morning and evening. That's been his routine for about a decade and he hardly travels out of chennai to keep them feeding. He narrated his love towards those birds, how he could identify a particular flock, how he faces criticism from his neighbours and passers-by, how it all started. He feels like a parent to those parrots! I was just reminded of Mr. Bharathiyaar - காக்கை குருவி எங்கள் ஜாதி!

மூன்றாம் முடிச்சு

வாழ்வில் சில நினைவுகள் பளிச்சென்று இருக்கும், மறதிக்கு அப்பாற்பட்டது. சில பாடல்கள், சில மனிதர்கள், சில நிகழ்ச்சிகள், சில திரைப்படங்கள், சில எழுத்துக்கள். அது போல் சில திரைப்படங்களில் வரும் உரையாடலை நான் அசை போடுவது உண்டு. அன்பே சிவம் படத்தில் ஒரு கட்டத்தில் மாதவன் "என்ன ஒரு intelligent design" என்று கடவுள் மேல் கோபம் கொள்வார். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் - அப்படி தான் போலும் என்று தோன்றும். நாமும் அவர் போல் - இல்லை நான் கடவுளை நிந்திக்க மாட்டேன் என்று உடனே மாற்றி கொள்வோம் என்று தோன்றுகிறது. தொலைகாட்சியில் ஒரு விவாத மேடை நிகழ்ச்சியில் தீபாவளி ஏன் சந்தோஷமாக இல்லை என்று விவாதம். நானோ "எந்த நாளும் இனிய நாளே" கட்சி. தொடர்ந்து பார்த்தேன். அதில் ஒருவர் முன்பெல்லாம் ஒரு பண்டிகையை கொண்டாடுவதில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, அது இப்பொழுது இல்லை என்றார். உண்மை தானோ என்று யோசித்தேன். சிறு வயதில் புத்தாடைக்கும், இனிப்பு பலகாரங்களுக்கும், நண்பர்களுடன் சேர்ந்து விடுமுறையை கொண்டாடும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்பொழுது அது கண்டிப்பாக இல்லை. ஏனெனில் ஆடைகளும் இனிப்பு பலகாரங்களும் எப்பொழுதும் கிடைக்கிறது. அதனால் எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், சந்தோஷம் "எதிர்பார்ப்பு" என்பதில் இல்லை. இன்றைய காலத்தில் எதிர்பார்ப்பு மன இறுக்கத்தை (stress) தான் ஏற்படுத்திகிறது. சந்தோஷத்திற்கு காரணம் இளமை பருவம் தான். இனிப்பும், புத்தாடைகளும் இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இளமை பருவம் சந்தோஷமே!

இப்பொழுது, "படிப்பு" தான் வாழ்க்கை என்று ஓடும் மாணவர்களும், "காதல் தான் வாழ்க்கை என்று ஓடும் இளம் பருவத்தினரும், "நட்பு" தான் வாழ்க்கை என்று இளைஞர்களும், "பணம்" தான் வாழ்க்கை என்று ஓடும் திருமணம் முடித்தவர்களும், "பிள்ளைகள்" தான் வாழ்க்கை என்று ஓடும் நடுத்தர வயதினரும், "உடல்நிலை" (health) தான் வாழ்க்கை என்று நிறைய ஓடியவர்களும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தில் ஒன்றையே நினைத்து ஓடி ஓடி மற்றதை இழக்கிறார்கள். சந்தோஷம் தான் வாழ்க்கை என்று நினைத்து நடந்து போகும் என்னை போன்றவர்களுக்கு, அந்த ஓட்டம் சில நேரங்களில் வேடிக்கையாகவும், சில நேரங்களில் சவாலாகவும் இருக்கிறது. நிஜமாகவே இது intelligent design தான். என்னை நடத்தி செல்ல பாரதி இருக்கின்றான்.

" தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி பின்மாயும்
சில வேடிக்கை மனிதரை போல
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"

முடிவுரை:
நான் இந்த bloகை publish செய்யம் முன்னே மீண்டும் படித்து பார்த்து proof-read செய்தேன் (சென்ற bloகில் எக்கச்செக்க எழுத்து பிழைகளை செய்து விட்டது இந்த google text services tool). அப்பொழுது மூன்று துணுக்குகளும் சம்பந்தம் இல்லாமல் இருப்பதை கவனித்தேன். ஒரு மாதிரி வாழ்கையின் theme போல் தோன்றியது. முன்னுக்கு பின் சம்பந்தம் இல்லாமல் (சம்பந்தத்தை புரிந்து கொள்ள முடியாமல்) இருக்கும் அனுபவங்களின் குவியல் தான் வாழ்க்கை என்று தோன்றியது. Definitely an intelligent design - my dear lord! எல்லாம் வல்ல இறைவன் என்று சொல்லிக்கொண்டே "publish" செய்கிறேன்!

Saturday, 11 October 2014

கண்ணாடி

கண்ணாடி

உலகத்தில எவனுமே நல்லவன் இல்ல!

நாம் அனைவரும் "சரி - தவறு" என்னும் ஏதேனும் ஒன்றில் அடங்குவோமா என்றால் இல்லை; சில சமயம் சரியாகவும், சில சமயம் தவறாகவும் இருக்கும் முரண் நாம் - என்று ஒருவர் கோவிலில் தத்துவம் பேசி கொண்டிருந்தார். அங்கே இருந்தவர்களில் ஒருவர் கூட அவர் பேசுவதில் கவனம் செலுத்தவே இல்லை. கதாகாலட்சேபம் முடிந்தவுடன் கிடைக்கும் பொங்கலே குறியாய் அமர்ந்திருந்தனர். அவர் சொன்னதை கேட்ட சிலருள் நானும் ஒருவன். என்ன தத்துவம் அது? என்று யோசிக்க ஆரம்பித்தேன். நல்லவன் என்றால் எல்லோரிடதிலும், எப்பொழுதும் நல்லவனாய் இருக்க வேண்டுமா? அப்படி ஒருவனால் இருக்க முடியுமா? அந்நியன் படத்தில் சொல்வது போல் தப்பை - small, large, extra large என்று பிரிக்க முடியுமா? 

பொய் சொல்வது தவறா என்றால்- ஆம். ஆனால் பொய் சொல்லாதவன் எவன்? அலுவலகத்தில் இல்லாத பொய்யா? "உன்னை போல ஒருவன் வேலை செய்ய முடியாது, உனக்கு இந்த வருடம் கண்டிப்பாக பதவி உயர்வு (promotion)" என்று பொய் சொல்லும் மேலாளன், "நான் கண்டிப்பாக திங்கள் கிழமைக்குள் பணியை முடித்து விடுவேன்" என்று பொய் சொல்லும் ஊழியன், "வீட்டிற்கு இன்றே அனுப்பி (delivery) செய்வோம்" என்று பொய் சொல்லும் வியாபாரி, "bus late" என்று பொய் சொல்லும் மாணவன், குடிக்கவே இல்லை என்று பொய் சொல்லும் கணவன், லஞ்சம் வாங்கும் அதிகாரி - இவர்கள் எல்லாம் நல்லவர்களா? ஆனால் இந்த listஇல் சின்ன தவறு - பெரிய தவறு எது என்று நம் மனது ஏற்கனவே பிரித்து விட்டது, அல்லவா?

அலுவலகங்களில் "team building" என்ற பெயரில் வெள்ளிக்கிழமை மேலாளன் அவன் கீழ் வேலை செய்பவர்களை கூப்பிட்டு கொண்டு ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் சாராயம் குடிப்பான். அதற்கு அந்த கம்பெனி பணம் செலுத்த வேண்டும். இது பரவாயில்லை என்றால், புதிய பொருள் அறிமுகம் செய்ய (product launch), அந்த அலுவலகமே ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டு சாராயம் (சீமை சரக்கு) வாங்கி கொடுப்பார்கள். அதற்காக கூட்டம் கூட்டமாக வந்து கை தட்டி, ஆங்கிலம் பேசி, coat அணிந்து வந்து சேர்வார்கள். அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு peon டாஸ்மாக் கடையில் குடித்து ரோட்டில் நடந்து சென்றான் என்று கேள்வி பட்டால் அவனை வேலையில் இருந்து நீக்கி விடுவார்கள்.


பொய், பித்தலாட்டம், பாசாங்கு இதெல்லாம் தெரியாவிட்டால் வியாபாரம் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். அனைத்து இடங்களிலும் பொய். பணம் என்பதை துரத்தி ஓடுவதில் சரி - தவறு என்பதெல்லாம் யோசிக்கவே நேரம் இல்லை. அதற்குள் இன்னொருவன் முன்னே ஓடி விடுவானே. என்னை விட நிறைய சம்பளம், என்னை விட பெரிய வீடு, கார் வாங்கிவிட்டானே என்று பொறாமையில் ஓட்டம்.

அரசியல் என்றாலே அது கெட்ட வார்த்தையாய் ஆகி விட்டது. அவர் அரசியல்வாதி என்று சொன்னால், உடனே மனதிற்குள் ஒரு விதமான தப்பு அர்த்தம் செய்து கொண்டு விடுகிறோம். நாட்டின் தலை எழுத்தை மாற்றி விடுவோம் என்று மேடை பேச்சை கேட்டு கேட்டு, ink தீர்ந்து போனது தான் அறுபது வருட சுதந்திரம்.

அனைத்து இடங்களிலும் லஞ்சம் - குழந்தை பிறந்தவுடன் பதிவு செய்வதிலிருந்து, பள்ளிகளில் இடம் கிடைக்க (donation) என்ற பெயரில் லஞ்சம், தேர்வில் வெற்றி பெற லஞ்சம், அரசு உத்தியோகம் கிடைக்க லஞ்சம், திருமணம் பதிவு செய்ய லஞ்சம், ஓட்டுனர் உரிமம் பெற லஞ்சம், நிலம் வாங்கி விற்று பதிவு செய்ய லஞ்சம், வியாபார உரிமம் பெற லஞ்சம், கடைசியில் பிரேத கிடங்கில் பிணத்தை பெற லஞ்சம் - எங்கும் லஞ்சம் - எதிலும் லஞ்சம். இதில் லஞ்சம் வாங்குபவர்களை விட கொடுப்பவர்களே அதிகம். அவர்கள் செய்யும் தவறுகளுக்காக தான் கொடுக்கிறார்கள், பாசாங்கு மனிதர்கள். இவ்வளவும் செய்யும் மக்கள் அரசியல்வாதிகளின் ஊழல் தொலைகாட்சியில் வந்தால் திட்டுவார்கள். மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி!

இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டும்...............

இந்த தலைப்பில் நான் எழுதி கொண்டிருப்பதை, என் நண்பன் ஆத்மாவிடம் காண்பித்தேன். அவன் "சார் இந்த மாதிரி நிறைய படித்ததும் பார்த்ததும் உண்டு. கடவுள் பாதி - மிருகம் பாதி தத்துவம் தானே. நாம் உலகத்தை பார்க்கும் விதத்தில் தான் உலகம் நமக்கு தெரியும். அதில் கெட்டதும் இருக்கிறது, நல்லதும் இருக்கிறது. ஒரு செய்திதாள் போல. நாம் கெட்ட செய்திகளை மட்டும் படித்தால், depressing ஆக தான் இருக்கும். நல்ல செய்திகளை தேட வேண்டிருக்கிறது. இருந்தாலும் நல்ல செய்திகளும் இருக்கின்றன. தொலைகாட்சியில் நல்ல நிகழ்சிகளும் வருகிறது. ஏனோ நாம் தான் அதை பார்ப்பதில்லையோ என்று நினைக்கிறேன். உலகம் ஒரு கண்ணாடி போல நம்மை போன்று தான் இருக்கிறது.  "உலகத்தில எவனுமே கெட்டவன் இல்ல!" என்று பாசிட்டிவா எழுதினா நல்லா இருக்குமே" என்றான். எனக்கு "வேதம் புதிது" படத்தில் சத்யராஜ் கன்னத்தில் அறை வாங்குவது போல் இருந்தது. கோபத்துடனும் வெட்கத்துடனும் Ctrl + shift + Home, Delete பண்ணுவதற்கு முன்னால், பிரசுரியது bloகியது!

Tuesday, 12 August 2014

கண்டிப்பாக இரண்டாவது முறை படிப்பீர்கள்!



Facebook status, blog போன்ற இடங்களில் தமிழில் எழுதுவது “கெத்து ஆகிவிட்டது. நானும் கொஞ்சம் காலரை தூக்கி கொள்வோமே என்று இந்த முயற்சி.

ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சோம்பேறித்தனமாக சுற்றி கொண்டிருந்தேன். “அங்கே போக வேண்டும் என்று போகவில்லை, அந்த பக்கமாக போனதால் பார்த்தேன். பார்த்தால் “அங்கே இருபது பேர் காத்திருந்தார்கள். மனைவிக்கு போன் போட்டேன் “இப்போவே நிற்க ஆரம்பித்து, இருபது பேர் இருக்கார்கள். நீ அம்மாவை வர சொல் – போனில் ஒரு பரபரப்பு. நான் பேசி முடிப்பதற்குள் குடுமி கடுக்கன் போட்ட ஒருவர் மல்லிகா ஷேரவாத் படம் போட்ட 40 பக்கம் notebook ஒன்றை நீட்டினார். அவரை ஒரு பத்து பேர் சூழ, என்ன என்று கேட்டு தெரிந்து கொள்வதற்குள், ஆட்டோக்களும் கார்களும் வந்து கொண்டே இருந்தது. அனைவரும் பேரும் போன் நம்பரும் – சீரியல் நம்பர் போட்டு எழுதினோம். அவர் அதை “சமூக சேவை என்றே கூறினார். என் மனைவி அம்மாவை அழைத்து வந்தாள். “அதற்குள்ளேவா? என்று அவள் கேட்பதற்கு வாய்ப்பே இல்லாமல் கூட்டம் அலை மோதியது. குடுமி மாமாவுடன் இன்னும் இரண்டு மூன்று volunteers”  சேர்ந்து இருந்தார்கள். அம்மா – நீ இப்போ நின்று கொண்டு இரு, நான் replacement  ஏற்பாடு செய்து விட்டு வருகிறேன் என்று நானும் என் மனைவியும் சென்றோம்.
சில உரையாடல்கள்:
மதியம் – அம்மா, மாலை – அப்பா, வேண்டாம் – நானே மாலை போகிறேன். நீ இரவு ஒரு இரண்டு மணி நேரம் மட்டும் அப்பாவை வர சொல். நான் தம்பியுடன் பேசுகிறேன். அவன் கொஞ்ச நேரம் இருந்தால் நன்றாக இருக்கும்.
தம்பி – எங்கேடா இருக்க? இன்றிரவு ஒரு nightout பண்ண முடியுமா? அவன் யோசித்து பார்த்து OK என்று சொன்னான். அதிகாலை English premier league எங்கள் துணை இருந்தது. ஆனால் மூன்று மணிக்கு relieve பண்ணி விட வேண்டும் என்றான். Manchester united கண்டிப்பாக வெற்றி பெரும் என்று அவன் தலையில் ice வைத்து போனை துண்டித்தேன்.
மீண்டும் “அங்கே வந்தால், ஒரு பெரிய லைன் இருந்தது. அம்மாவிடம் இருந்து நான் baton” வாங்கி கொண்டு நிற்க தொடங்கினேன். எனக்கு சிறு வயதிலிருந்தே பார்ப்பவர்களுக்கு புனைபெயர் வைத்து கேலி செய்யும் பழக்கம் உண்டு. இவ்வளவு சுவாரசியமான மனிதர்கள் என்றால் சும்மாவா. எனக்கு முன் நிற்பவர் பழகுவதற்கு எளிமையாக இருந்தார். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர். அவர் நிறுவனத்தில் ஆரம்பித்து திருப்பதி நடைபாதையில் உள்ள ஒரு பள்ளதாக்கு, தோனியும் கங்குலியும், ராபர்ட் மெய்னர்ட் கெய்ன்ஸ் எழுதிய பொருளாதார கொள்கைகள், ராஜஸ்தானி டாபாவின் சப்பாத்தி என்று பல கருத்து பரிமாற்றங்கள். இடையில் பல இடைஞ்சல்கள். எங்களுக்கு மூன்று நான்கு token (40 பக்க மல்லிகா ஷேரவாத் ஞாபகம் இருக்குமே) ஒரு “AK 47” (ஆர்வ கோளாறு). அப்படி ஒரு படுமையனை (pessimist) நான் பார்த்ததே இல்லை. தெனாலி கமல் போல எதற்கும் பயம். சார் – இப்போதே ஒரு பெரிய அடிதடி நடந்தால் என்ன செய்வது? போலீசிடம் சொல்லி விடலாமா? கூட்டம் அதிகமாகிவிட்டதே? முன்னூறு பேர் தாண்டி விட்டதே? சண்டை கண்டிப்பாக வரும் என்று அவ்வபோது எங்கள் உரையாடலை கெடுப்பான். இருந்தாலும் சிரிப்பு தான் வந்தது. நாங்கள் சளைக்கவில்லை. காப்பி - டீ (சைக்கிளில்) வியாபாரிகள் வந்தனர். அவர்களுக்கு எப்படி மூக்கில் வேர்க்கும் என்று MBA பயிலும் மாணவர்கள் கண்டு பிடிக்க வேண்டும் (அந்த வேலைக்கு அவர்கள் தான் சரி :) ).
Fridge இல் வைத்த ஆப்பிள் பழம் போல் சில பேர் வாழ்பார்கள். பெரும்பாலும் பணக்காரர்களாக இருப்பார்கள். பள்ளியில் இருந்தே எல்லா பாடங்களுக்கும் tuition செல்வார்கள், இருந்தும் 70% தாண்ட மாட்டார்கள். தினம் அம்மா டிரைவருடன் பள்ளிக்கு கொண்டு வந்து விடுவாள். வெயில் தாங்க மாட்டார்கள்; பள்ளி கழிவறையில் நாற்றம் தாங்க மாட்டார்கள்; சண்டை போட மாட்டார்கள்; பள்ளிக்கு வெளியே மாங்காய் வாங்க மாட்டார்கள்; குழாயில் தண்ணீர் குடிக்க மாட்டார்கள், அவர்களின்  வாழ்க்கையில் ஒரு சோகம் இருக்காது, கோபம் இருக்காது, வீழ்ச்சி இருக்காது. 21 G பஸ் எங்கிருந்து எங்கே போகும் என்று அவர்களுக்கு தெரியாது, சைக்கிளில் கழண்டு போன செயினை மாட்ட சத்தியமாக தெரியாது, ஜுரம் கூட வராது என்று தான் நினைக்கிறேன். சில நேரங்களில் கடவுளிடம் இவர்களுக்கு Second innings” கொடு என்று வேண்டியது உண்டு. இப்படி பட்ட ஒரு ஆப்பிள் எங்களிடம் வந்தான். “நீங்கள் எல்லாரிடம் கேட்டு முடிவு செய்து தான் இங்கே நிற்கிறீர்களா? என்றான். என்ன கேட்க வேண்டும் என்றேன். “ஒரு பெரிய பட்டியலிட்டு, அதற்கு சில முக்கியமான விபரங்களை சேகரித்து, கேள்விகளை தயாரித்து, அதில் எல்லோரும் என்ன சொல்கிறார்கள் என்று சர்வே செய்வதை பற்றி ஆரம்பித்தான். இது அப்படி எடுக்க வேண்டிய முடிவு அல்ல. அதற்குள் ஒரு Gym Body குறுக்கே வந்து எங்களை காப்பாற்றினான். Attendance எடுக்க ஆரம்பித்தார்கள். Token வரிசை படி பெயர் போன் நம்பர் ஒவ்வருவரும் சொல்ல, அவர்கள் சரி பார்த்து கொண்டே சென்றனர். அது முடிந்த பின் டீ குடிக்க சென்றவர்கள் அவர்கள் இடத்திற்கு வர, “இப்பொழுது தான் வருகிறார்கள் என்று சிலர் கூச்சலிட, நம்ம AK கை நடுங்கி கொண்டே எங்கள் அருகில் வந்தான். எனக்கு சில ரவுடிகள் தெரியும் என்றான். நாங்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தோம்.
இரவு எட்டு மணி முதல் பத்து மணி வரை அப்பா “duty” பார்த்தார். தம்பி MP3 player உடன் வந்து அப்பாவை வழி அனுப்பினான். கொசுவர்த்திகளும், odomos உம், தெருவில் இருந்த குப்பைகளை கொளுத்தியும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கொசுக்கள் தான் ஜெயித்தது. நான் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு வந்தேன். பெப்ரவரி மாதம் என்றாலும் கொஞ்சம் கூட குளிரே இல்லை. இதற்கு இடையில் AK, Gym Body, apple, குடுமி மாமா மற்றும் சில பேரும் கொஞ்சம் பதற்றமாக பேசி கொண்டிருந்தனர்.  AK தான் பதற்றத்திற்கு காரணம். “ஒரு நூறு இருநூறு பேர் திடீர்னு வந்து இந்த token எல்லாம் செல்லாது என்றால் என்ன செய்வது? அவங்கள் ஒரு நோட்டு புத்தகம் எடுத்து நம்பர் போட்டார்கள் என்றால் என்ன செய்வது? என்று குழப்பினார். எல்லோரும் சேர்ந்து, இன்னொரு முறை Attendance எடுப்பது என்று முடிவு செய்தார்கள். இது மூன்றாவது முறை. முடிந்தவுடன் சண்டை வந்தது. கூட்டம், கூச்சல், குழப்பம், சமாதனம். விடிந்தது.

காலையில் “அங்கே பெரிய கேட்டை திறந்து உள்ளே ஒரு மைதானத்தில் உட்கார வைத்தார்கள். அப்பா காலையில் Flaskகில் காப்பி எடுத்து கொண்டு வந்தார். Token நம்பர் 850 ஐ தாண்டி விட்டதாமே என்றார். சிலர் “அங்கே நிற்கும் வேலையை outsource செய்திருந்தார்கள். காலையில் குளித்து முடித்து தெம்பாக வந்து சேர்ந்து கொண்டார்கள்.

ஆரம்பித்தது; ஒருவர்க்கு பத்து நொடிகளுக்கு மேல் ஆகவில்லை. பெயர், அப்பா பெயர் மட்டும் தான் கேட்டார்கள். பெயர் சொல்லி, அப்பா பெயர் சொல்லி வாங்கினேன் என் மூன்று வயது மகனுக்கு LKG யில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை! மிகவும் சந்தோஷமாக வாங்கினேன்!


பின்குறிப்பு (முன்குறிப்பும் கூட)
இதை படிப்பவர்களுக்கு சுஜாதாவின் ஞாபகம் வந்தால்– சுஜாதா என்னும் பெருங்கடற்கரையில் இருக்கும் பல கோடி மணலுள் ஒரு துகள் நான்!


Monday, 14 July 2014

தொடக்கம்!

For a long time, i have been staying away from blogging. However i have finally managed the temptation (by yielding to it) and thats why this blog. I am better talking; I am not a reader either. I believe in doing things (many times all by myself), than talking about it. But there is fun in doing something when provoked! I get provoked when people say "You cant do it". I never get judgmental to see if reacting to such a provocation is a weakness or a strength. I just enjoy doing it and yeah, there is a pleasure in doing such things.I feel provoked when people say i dont have the patience to blog; hence trying my hand (keyboard) in blogging! When i was wondering what should i blog about, came Thiruvalluvar to my rescue (Remember Kamal saying - White beard, mylapore man, near sanskrit college). ஆதி பகவன் முதற்றே உலகு! 

My first superhero!
My dad is a sales man by profession, a very blessed soul! We would have heard that there are a lot of things with a very thin line of difference - ignorance and innocence is one - My dad taught me that! I feel he is blessed, because i feel that on many occasions, God exempted him from taxing his ignorance and on other occasions he is so innocent that he does not even realise that he is paying for one! I remember that he bought a kurta for my third year birthday (thats the earliest that i could remember), he would lend his accelerator of his moped on the beach road and make me feel that i am riding it (he would tell my pillion அம்மா "see he is driving" - Priceless, Visa guys should advertise!), occasional masala dosa from Hotel Ganesh bhavan, Arun ice creams plastic balls, plum cakes, dress materials, cricket balls and bats and caps! He would know everything out on the road - taught me traffic signals, routes, trains, platform tickets, rockfort express, central and egmore, Looking up on a railway timetable, connecting trains, packing, suitcases, kit bags, towels - you should get the drift - i told you he was a salesman! I remember that he bought me a wrist watch spending his entire quarterly incentive. As soon as he gave me, i put it down and it broke - he smiled and said "its alright, i will get you another one!". He followed every sport - cricket, football and tennis - he taught me LBW and offside! I remember he hit me once for annoying him and started crying (child-like) afterwards. Friends do you remember your PT period in primary school - post lunch, perhaps the last period for the day, you are asked to take your bags and come to the ground, you just run with a feeling of infinite happiness! One such day, i too ran with my class on to the ground, the PT master used his whistle wrist wrap on a bunch of students to restore sanity. I too took a blow (if you could call it so) on the arm. When i went back home, my dad saw this 3 mm red mark on my arm. He took me immediately back to school and started fighting with the PT master in front of the principal for the "grave" punishment (of course i was worried about the next PT period)! Adolescent years - I started drifting away from him (as is every boy). He would pick me up from school at 2.45 PM to ensure that i dont miss an over or two in a day-night cricket match (the match would start at 2.30 PM and i would be constipating till the school bell rings) - only he understands how much it means to me! AR.Rahman came into my life, he bought me a tape recorder and the cassette of the movie "genteman" - that would have run a million times! Slowly, the natural process of growing up, engulfed my expression of intimacy towards him (intimacy intact). Neither he nor I realised that he did not worry about him, his health or his finances. For many of us, who hurry to grow up and long to be a child back again - My dad never has this problem! When he sees this blog, he would want to share this with his friends and colleagues and say that "My son has written this!". Perhaps he would not even read this in full nor would be able to empathise my emotion!

அம்மா!
Somehow i feel more comfortable typing it in tamil, cant explain why.  While my dad gave me the games, அம்மா made the rules. Dad bought me cricket balls, அம்மா would say when to play! Dad bought me icecreams, அம்மா would decide when to eat it! Remember that wrist watch story - as soon as i put it down, அம்மா- முதுகு - பட்டார்ர்ர்! Her biological clock has never failed. Never once in my 14 years of schooling, have i gone late to school, forgotten to take my notebooks, geometry box, map drawing notebooks, colour sketch pens, wore the wrong "black" shoe on a PT period day, homework, used a foul word, went below the first 5 ranks in my class. Perfection is synonymous with அம்மா! SHE NEVER TIRES, NEVER FAILS, NEVER FALTERS (பண்புத்தொகை)! I cant escape without providing details to her - She would always ask the right questions (to make my responses limited) - Did the science teacher ask about your bad handwriting? Did you submit your holiday homework? How much did Madhavan score in Social science? For her GOD is in the details! She just created a system inside and around me where i simply CANNOT go wrong - SOX compliant! While my dad did not care about his finances, she did. She would know how to manage every single expenditure. She ensured that none of our middle class woes affected me. She quit her job to take care of me (when i was born) and rejoined office after a break of 14 years, battled and toiled her middle age physiological issues, to take care of our finances. She just filled me with an indomitable spirit of "never say die"! அம்மா is more than a word, i would say its more than an emotion, its more than anything perceived and not perceived till date !

First take!
This blog is to thank them in this form - THANKS! I celebrate my parents everyday!

As you would have realised, its not just about me and my parents in this blog, its nostalgia, childhood memories and its your parents as well - may be the details could be different - the thrust is the same. When you are running a temperature and lie in your mother's lap, you feel protected as if you are inside her womb. That feeling out-emotes your sickness. Try to bring a smile on their face everytime - there is no better accomplishment than that!

What do you expect in my blogs?
Anything!

Warning: My blogs may have அழுத்தமான experiences / values / sharings. It would be written in english predominanty (தமிழ் போன்ற​ பிறமொழி கலப்பு இருக்கலாம் :) )

Looking forward to my next blog! (well there should atleast be one person to look forward to...........)
Prashanth





ரயில் சிநேகம்

இந்த பதிவின் ஆதியிலே அந்தத்தை எழுதி விடுகிறேன். ஹே ராம் படத்தின் இறுதியில் சாகேத் ராமன் துஷார் காந்தியிடம் " Mr.Gandhi, I have the most...